Sunday, August 8, 2010

Endhiran songs

நாம ஸ்கூல் இல்ல காலேஜிலே படிக்கும் போது ரெண்டு ரூபா இல்ல மூணு ரூபாய்க்கு பாட்டு புத்தகங்களை வாங்கி இருப்போம் ..அதுலே நிறைய பிழைகள் இருக்கும். என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் ரெண்டு ரூபாய்க்கு இது போதும் என்பாங்க. இல்லைனா ரொம்ப எதிர்பார்க்க கூடாதுன்னு சொல்வாங்க... அப்பறம் எதுக்காக அந்த பாடு புத்தகத்தை வாங்கனும்னு நான் கேப்பேன் .

எந்திரன் படத்து பாட்டெல்லாம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாள் ஆனாலும் , பாடல் வரிகள் சரியாய் யாருக்கும் கிடைச்சிருக்க வாய்ப்பு இருந்திருக்காது .
இன்டர்நெட்டில் தேடி கிடைத்த சில பதிவுகளில் தப்பான சில வார்த்தைகள் இருந்ததாலே சரியான வரிகளை தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் blogger கீழ் கண்ட linksku போய் பார்க்கவும்.

Kilimanjaaro lyrics

Irumbile oru irudhayam

Kaadhal anukkal


Puthiya manitha

Puthiya manitha - song lyrics


Lyrics: Vairamuthu

Singer; SP Balasubramaniam





(robo SPB)

புதிய மனிதா

பூமிக்கு வா


(robo)

எஃகை வார்த்து

சிலிகான் சேர்த்து

வயரூட்டி உயிரூட்டி

ஹார்ட் டிஸ்கினில் நினைவூட்டி

அழியாத உடலோடு

வடியாத உயிரோடு

ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி

ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி


(Khatija)

மாற்றம் கொண்டுவா

மனிதனை மேன்மை செய்

உனது ஆற்றலால்

உலகை மாற்று


எல்லா உயிருக்கும்

நன்மையாய் இரு

எந்த நிலையிலும்

உண்மையாய் இரு


(SPB)

எந்திரா...எந்திரா..

என் எந்திரா!

நான் கண்டது ஆறறிவு

நீ கொண்டது பேரறிவு

நான் கற்றது ஆறு மொழி

நீ கற்றது நூறு மொழி

ஈரல் கலையும் துன்பமில்லை

இதயக்கோளாறு ஏதுமில்லை

தந்திர மனிதன் வாழ்வதில்லை

எந்திரம் வீழ்வதில்லை


கருவில் பிறந்த எல்லா மரிக்கும்

அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை

இதோ என் எந்திரன்

இவன் அமரன்

இதோ என் எந்திரன்

இவன் அமரன்



நான் இன்னொரு நான்முகனே

நீ என்பவன் என் மகனே

ஆண் பெற்றவன் ஆண்மகனே

ஆம் உன் பெயர் எந்திரனே


(chorus - twice)

புதிய மனிதா

பூமிக்கு வா


(SPB)

நான் என்பது அறிவு மொழி

ஏன் என்பது எனது வழி

வான் போன்றது எனது வெளி

நான் நாளைய ஞானஒளி


நீ கொண்டது உடல் வடிவம்

நான் கொண்டது பொருள் வடிவம்

நீ கண்டது ஒரு பிறவி

நான் காண்பது பல பிறவி


ரோபோ ரோபோ

பன்மொழிகள் கற்றாலும்

என் தந்தை மொழி தமிழ் அல்லவா !

ரோபோ ரோபோ

பல கண்டம் வென்றாலும்

என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா !


(robo SPB)

புதிய மனிதா

பூமிக்கு வா

Thursday, June 10, 2010

வினோத செய்திகள்

சமீபத்தில் படித்த ருசிகர செய்தி ஒன்றை ப்ளாகர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறன்.

நியூயார்க் Citi வங்கியில் பணிபுரிந்த ஒரு பெண், தான் இயற்கையாகவே மிகவும் “கவர்ச்சியாக” (HOT) இருப்பதால் “பணி நீக்கம்” செய்யப்பட்டதாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்.
“என்ன கொடுமை சார் இது? ”
“மடயனுங்க … கூடவே “வெச்சு” இருக்க வேண்டிய resourceஐ தூக்கிட்டாங்களே ! :(…. ”
“என்னடா , நம்ம கம்பெனிலே இருந்த அவளை promote அல்ல பண்ணி இருப்போம்?? !! ”
படித்த உடனே, உங்களில் சிலர் மனதில் இப்படி எல்லாம் யோசனைகள் ஓடலாம் ;)

ஆனால் இது தான் நடந்திருக்கிறது என்று விவரிக்கிறார்,Debrahlee.


மாலை-மலர் ஸ்டைலில் சொல்லப்போனால், மேலே அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளவர் ;)

அம்புக்குறி எல்லாம் போட்டல், அதை ஏன் அங்கே போட்டீங்க என்று கேள்விகள் எழும் என்பதால் அம்புகுறி தவிர்க்கபட்டுள்ளது :)



 


இவரை மேலும் பார்த்துக்கொள்ள , சாரி புரிந்துகொள்ள ;) விருப்பம் உள்ளவர்கள் , இங்கே கிளிக் செய்யுங்கள் !


இவர் இப்போது JPMC இல் பணிபுரிகின்றார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







இந்த செய்தியை படித்து முடித்த உடனே நம் கண்ணில் பட்ட மற்றொரு செய்தி : “அழகாய் இருப்பதால் என்னை அடிக்கடி பிடிக்கும் போக்குவரத்து போலீசார் - வாஷிங்டன் பெண்மணி Dasha வருத்தம் !” .



இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் சாத்தியமல்ல, உலகெங்கும் பொருந்தும் என்று ஞானிகள் அறிந்த்திருப்பர் :)

Wednesday, June 9, 2010

விமலாவின் கொலை!

விமலா மிரட்சியோடு நின்றிருந்தாள்…
சைமன் நீண்ட பட்டாகத்தியை ஒற்றை கையில் பிடித்தபடி விமலாவை நோக்கி வந்தான்!
சைமனிடம் தான் மாட்டிகொண்டதை நினைத்து உள்ளுக்குள் கலங்கினாள்.

“கடவுளே, என்னை காப்பாற்று!” என்று வேண்டிக்கொண்டு ஒரு திரையின் பின்னே ஒளிந்துகொண்டாள்!
சைமனை தடுப்பார் யாரும் இல்லை!!!!
கத்தி திரை வழியே ஊடுருவி அவளை பதம் பார்த்து வெளியே வந்தது!!!
சைமன் ஆக்ரோஷமாக சிரித்துகொண்டிருந்தான்!!!
விமலாவின் பணியின் முதல் நாள் இவ்வாறு முடிந்தது.
கைதட்டல்களோடு சைமனின் மேஜிக்-ஷோ ஆரம்பித்து இருந்தது !